தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறான காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென பாமக நிறுவனர் கோரிக்கை வைத்துள்ளார்.
பள்ளி விடுமுறை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டில் குழந்தைகளையே குறி வைத்து தாக்குகிறது. மற்றொரு புறம் ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes Aegypti) எனும் பெண் கொசு மூலமாக பரவும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி பொதுமக்களை பீதி அடைய செய்கிறது. அதனால் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் அரசு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தற்போது காய்ச்சலானது அனைத்து பகுதிகளுக்கும் கட்டுக்கடங்காமல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளதாவது, தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும். மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களே உஷார்..இனி இதை செய்யாதீங்க! காவல்துறையின் எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இதையடுத்து தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளதால் மாணவர்கள் ஒன்று கூடி விளையாடி வருகின்றனர். இதனால் காய்ச்சல் பரவுவது அதிகரிக்கக்கூடும். அதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், மாணவ செல்வங்களை காய்ச்சலில் இருந்து பாதுகாக்கவும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்