தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகே இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் வாட்ஸ் ஆப் மூலம் வினாத்தாள் அனுப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பொங்கல் கொண்டாட்டம்!

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றது. பிறகு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக அதிகரிப்பு, 23% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

ஆனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுவதால் அந்த மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கு 10, 11, 12-ம் வகுப்பு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகே, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!