அக். 3ம் தேதி வரை அரசு பள்ளிக்கு விடுமுறை – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அரசு செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றது. பல மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!
தமிழக அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அறிவித்து அதனை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் செப்.30 இல் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கொரடாச்சேரிஉயில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா அபரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், பள்ளியில் உள்ள 4மாணவிகள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 3ம் தேதி வரை 5 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.