தமிழக தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை – பள்ளிக்கல்வி ஆணையர்!
தமிழகத்தில் கல்வி கட்டணம் வசூலிப்பதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என்று பள்ளிக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகள் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் உள்ளது. ஆனாலும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுப்பதால் 2021-2022 புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள போதிலும் தொற்று பரவும் அச்சத்தால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையிலும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் விளக்கம்!
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் ஏழை எளிய நடுத்தரவர்கத்தினர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த இக்கட்டான காலத்தில் கல்வி கட்டணம் பெரும் சுமையாக இருக்கிறது என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தனியார் பள்ளிகள் 75 % முதல் 85 % வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அதை தவணை முறையில் வசூலித்து கொள்ளவும் உத்தரவிட்டது. ஆனாலும் சில தனியார் பள்ளிகள் விதியை மீதி பெற்றோர்களை வற்புறுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை நேரடி அல்லது ஆன்லைன் வகுப்பில் இருந்து விலக்கி வைக்க கூடாது என்றும் கூறி உள்ளார். அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.