தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு எழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து பொதுத்தேர்வு மற்றும் இறுதி தேர்வுகளை எழுதினர். மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விருதுநகரில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தேர்ச்சி முடிவினை வெளியிடலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது வரைக்கும் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 9 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனிடையே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கே பலரும் விடுப்பு எடுத்த காரணத்தினால் அந்த மாணவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பள்ளிகளை தயார்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.