ஜனவரி 18 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜனவரி 18 முதல் ராஜஸ்தானில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அவர்கள் தலைமையில் மாநிலத்தில் கொரோனா பரவல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வகுப்புகள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்கள் சார்ந்த வகுப்புகள் என அனைத்தும் ஜனவரி 18 முதல் திறக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் – முதல்வர் ட்வீட்!!
ராஜஸ்தானில் குறைந்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜனவரி 13 முதல் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கோரோன் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் துணை மருத்துவக் கல்லூரி ஆகியவையும் ஜனவரி 11 முதல் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!
ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நாளில் 50 சதவீதம் மாணவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு இரண்டாவது நாளிலும் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்