பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை – மத்திய அரசு அதிரடி

0
பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை - மத்திய அரசு அதிரடி
பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை - மத்திய அரசு அதிரடி

பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோருடன் ஆலோசனை – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்காக இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால், கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.

இதனால் பல்வேறு வகுப்புகளுக்கு நடத்தப்பட வேண்டிய ஆண்டு இறுதி / செமஸ்டர் / பொதுத்தேர்வுகள் யாவும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வரை நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தேர்வுகள் நடைபெற்றால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அடுத்த கல்யாண்டு தொடங்குவதும் இதனால் தாமதமாவதால் பல புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. பள்ளி,கல்லூரிகள் திறப்பு குறித்து ஜூலையில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில கல்வி செயலகங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தை சார்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் உருவான கருத்துகளை அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!