இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் 50% மாணவர்களுடன் திறப்பு – மாநில அரசு முடிவு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், குஜராத் மாநில அரசு இன்று முதல் பள்ளி, கல்லூரிகளை 50 சதவீத மாணவர்களுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், மாநிலங்கள் வாரியாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து உள்ளன. அதன்படி சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் இன்று முதல் கல்வி நிறுவனங்கள் 50% மாணவர்களுடன் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அம்மாநில அரசு வெளியிட்டு உள்ள உத்தரவின் படி, மாணவர்களின் வருகை கட்டாயமில்லை. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரிகள் மாணவர்களை நேரில் வரவழைக்க பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும் தொடங்கி உள்ளது. ஐம்பது சதவீத மாணவர்கள் வளாகங்களில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். வருகை கட்டாயமாக இருக்காது. குஜராத்தில் இதுவரை 824,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் 10,074 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.