நீலகிரி மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் தேசிய பேரீடர் மீட்பு படையின் உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.
ரெட் அலர்ட்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுக்காக்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாயார், பாண்டியாறு, பொன்னம்புலா , காளம்புலா போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மங்குனியாறு மற்றும் குடிவயல் ஆறுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் சேதாரம் ஏற்படுகிறது. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய காவல்துறை, தீயணைப்புதுறை, வருவாய்துறையினர் அடங்கிய 42 குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Post Office இல் பிக்சட் டெபாசிட்களை விட லாபம் தரும் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
வெள்ள சேதாரங்கள் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தேசிய பேரீடர் மீட்பு படை உதவியை நாடியுள்ளது. இதையடுத்து 74 பேர் கொண்ட குழு மீட்பு பணிகளுக்கு வர இருப்பதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமான கனமழை காரணமாக ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து இருக்கிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் கரையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ரெட் அலர்ட் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.