தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி! அமைச்சர் விளக்கம்!
கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உயர்வடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டுமாக பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகள் கொரோனா 4ம் அலைக்கான ஆரம்பம் என்று எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்க தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா, பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்த சில தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற உலக சாதனைக்கான நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகிறது.
அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார். அவர் மூலமாக எங்கள் துறைக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு, கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.