தமிழகத்தின் தேனியில் பள்ளிகள் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேனியில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் 31 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் இருந்தே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், பள்ளிகளில் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து தற்போது வரைக்குமே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கொரோனா தீவிரமாக பரவி வரும் காரணத்தினால் பள்ளிக்கு வரும் போது மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் எனவும், மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம் எனவும், உணவு உண்ணும் போது கூட தனித்தனியே அமர்ந்து உண்ணும்படி அறிவிக்கப்பட்டது. அதாவது, தமிழகத்தில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் 2765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TNPSC முக்கிய அறிவிப்பு – காலியாக உள்ள அரசு அலுவலக பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது, ஆண்டிபட்டியில் உள்ள பள்ளியில் சுகாதாரத் துறையினர் முதற்கட்டமாக 78 குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையில் 12 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, , 6 ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களும், 7 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும், 8 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களும் என மொத்தமாக 12 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இன்றும் 19 மாணவ,மாணவிகள் மற்றும் 9 பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவிகளுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது என்பதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.