ஜன. 5 வரை பள்ளிகள் மூடல் – மாநில கல்வித்துறை அறிவிப்பு… ராஜஸ்தானில் கடும் குளிர் எதிரொலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தின் பள்ளிகள் ஜனவரி 5ஆம் தேதி வரை மூடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
இந்திய மாநிலம் ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பதேபோர் நகரில் நேற்று மட்டும் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அதே போல சுருவில் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்து வருகிறது. தற்போது காலை நேரங்களில் கடும் குளிருடன் பனி காற்றும் வீசுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கவலையில் தமிழக மக்கள்.. பொங்கல் பண்டிகைக்கு எழுந்த சிக்கல்.. கொரோனா எதிரொலி!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு ஜனவரி 6-ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குளிரின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதானல் மாநிலங்களில் பள்ளிகள் ஜன . 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.