பள்ளிகளுக்கு ஏப்ரல் 18 வரை விடுமுறை – கொரோனா எதிரொலி !
பள்ளிகள் மூடல்:
நாட்டில் கடந்த ஆண்டை விட மிக வேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக சுகாதாரத் துறையினர் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அது மட்டுமல்லாமல் இதனை கடைபிடிக்க தவறுபவர்களிடன் கடுமையான அபாரத்தையும் விதித்து வருகின்றனர். மேலும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 11ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி !
அதன்படி கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதால் பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.