பிப். 7ம் தேதி முதல் பள்ளி & கல்லூரிகள் முழு நேரம் இயங்க அனுமதி – முதல்வர் உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து புனே மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழக்கம் போல செயல்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. மாநிலங்களில் பாதிப்புகள் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த மாத முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – குழப்பத்தில் மாணவர்கள்!
மேலும் ஒரு சில ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் தொற்று காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் மாநிலத்தில் மும்பை உள்பட அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் பிப்.1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. மும்பையில் மழலையர் பள்ளிகள் திறக்க கூட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன
இனி அனைத்து ஊழியர்களுக்கும் வார சம்பளம் – நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு!
ஆனால் புனே மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்.1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டாலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை முழு நேரமும் பள்ளிகள் செயல்பட்டது. இந்நிலையில் தற்போது பிப்.7 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் முழு நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி போட நடமாடும் வேன்களை இயக்க திட்டமிட்டு இருப்பதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.