தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்!
தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் மேற்படிப்புக்காக உயர்கல்வி அறக்கட்டளையின் வாயிலாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் உயர்கல்வி அறக்கட்டளையின் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதாவது, இந்த அறக்கட்டளையின் வாயிலாக மிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு உயர்கல்வி பயில தேவையான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
அதாவது, விருப்பமும் தகுதியும் பெற்ற மாணவர்கள் http://uhetrustindia.org/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இன்று முதல் வரும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மாணவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சான்றொப்பம் மற்றும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள நகல்கள் அனைத்தையும் இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RTE மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இதனையடுத்து, இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்லூரி திறந்து ஒரு வாரத்திற்குள் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை, அறை எண்:215, டாக்டர் எம்.ஜி.ஆர். ப்ளாக், வி.ஐ.டி. வளாகம், வேலூர்-632014 என்கிற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். அதாவது, இந்த தேர்வின் மூலமாக மாணவனின் குடும்ப பொருளாதாரம் பற்றி அறிந்த பின்னரே உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.