தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு சார்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் போன்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்ந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கு பட்ட படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் 2022 – 2023 ம் ஆண்டில் சிறுபான்மை இன மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ம் வகுப்பு வரை மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும், மேற்படிப்பு தொகையும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல் – மத்திய அரசு கேள்வி
இத்தொகையை பெறுவதற்கு மத்திய அரசின் இணையதளம் வாயிலாக தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலும் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவித்தொகை குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.