தமிழகத்தில் சிறும்பான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சிறும்பான்மையின மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைனம் ஆகிய சிறும்பான்மையின மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
30 நாட்கள் செல்லுபடியாகும் Reliance Jio ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
மேலும், தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே போல இந்தாண்டும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் www.scholarships.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறும்பான்மையின மதத்தைச் சார்ந்த மாணவர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல, 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் சிறும்பான்மையினர் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேசிய கல்வி உதவித்தொகை தொடர்பான திட்டம் குறித்து அறிய விரும்பினால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.