தமிழக சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை – அமைச்சரவை ஒப்புதல்!
தமிழகத்தில் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மையின மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக கல்வி உதவித்தொகையை பெற முடியும்.
கல்வி உதவி தொகை:
தமிழகத்தில் கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வியில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்று குறிப்பிட்ட சில சலுகைகளும் உள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் இவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இதனால் அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய திட்டங்களை வெகுவாக விளம்பரங்கள் மூலமும், அறிக்கை மூலமும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.25,000 கல்வி உதவித்தொகையாக அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் 12-ம் வகுப்பை முடித்து விட்டு கலை, அறிவியல் அல்லது வணிகம் சார்ந்த துறைகளில் உயர்கல்வி பயில வேண்டும். அவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு ரூ.8 லட்சமாக இருக்க வேண்டும். தற்போதைய அமைச்சரவையின் ஆலோசனையின் படி முன்னதாக வழங்கப்பட்ட தொகையை விட தற்போது இரண்டு மடங்கு அதாவது, ரூ.50,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்