10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கலாம், வாஜ்பாய் பெயரில் ஸ்காலர்ஷிப்? வைரலாகும் தகவல்!
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்காலர்ஷிப் பெறும் திட்டம் குறித்த ‘மெசேஜ்’ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வகையில் தற்போதும் கலாம், வாஜ்பாய் பெயரில் ஸ்காலர்ஷிப் குறித்து போலியான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
போலித்தகவல்:
அண்மையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவர்களுக்கு உயர்கல்வி, கல்விக்கடன் குறித்து ‘வாட்ஸ்- ஆப்’ மூலம், விதவிதமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில், ஸ்காலர்ஷிப் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் 12ம் வகுப்பு தேர்வில், 85 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, ரூ. 25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று செய்திகள் வைரலாகி வருகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு, மாணவர்கள் விண்ணப்பத்தை நகராட்சி அலுவலகங்களில் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐகோர்ட் உத்தரவு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவரின் கையிலும் ஆண்ட்ராய்டு போன் உள்ளது. இதனால் விரைவில் ஒரு தகவல் வைரலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மத்திய அரசு சார்பில் கலாம், வாஜ்பாய் பெயரில் மாணவர்களுக்கு இதுபோன்ற ஸ்காலர்ஷிப் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘இதுபோன்ற உதவித்திட்டம் குறித்து எதுவும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பங்களும் வரவில்லை. இந்த மாதிரியான போலியான தகவல்களை மாணவர்கள் நம்பி ஏமாற வேண்டாம் என அரசு அதிகாரிகள் அட்வைஸ் கொடுத்துள்ளனர். எனவே, மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுதல் போன்ற கல்வித்துறை தொடர்பான சந்தேகங்களை மத்திய அரசின் https://www.education.gov.in/