தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.
உதவித்தொகை
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிக்கையை சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகையை பெற 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, இதற்கும் மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாற்றுத்திறாளி இளைஞர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் இளைஞர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000க்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இதர வகுப்பினர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் வழங்கப்படும். இதே போல் தேர்ச்சி பெற்றவருக்கு மாதந்தோறும் 300 ரூபாய் வழங்கப்படும்.
TNPSC குரூப் 1 தேர்விற்கான கல்வி தகுதி, வயது வரம்பு? முழு விவரம் இதோ
இதனை தொடர்ந்து மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 உள்ளிட்டவை காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 மற்றும் மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 700 ரூபாய் மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000 ரூபாய் என பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.