தமிழக இளைஞர்களுக்கு உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் படித்து முடித்தவர்கள் அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் அதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். கடந்த 2 வருடங்களாக வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனால் அனைவரும் வேலை வாய்ப்பை தேடி ஓடி வருகின்றனர். இந்த நிலையில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Post Officeஇல் மாதம் ரூ.5100 முதலீடு ரூ.19 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10ம் வகுப்பு தேல்வியடைத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகளை கொண்டவர்கள் உதவி தொகை பெற சென்னை 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்யலாம்.
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo
இதன் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தவராக இருத்தல் வேண்டும். மேலும் பொது பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.பிற பிரிவினருக்கு சலுகை வயது வரம்பு சலுகை உண்டு. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க கூடாது. அத்துடன் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்