தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற கட்டாயமாக ஆதார் எண் தேவை எனவும், சில குறிப்பிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை:
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கு பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டமாக செயல்படும் இந்த பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஒரே திட்டமாக மாற்றவுள்ளனர். இதனால், இரண்டு திட்டங்களில் ஏதெனும் ஒரு திட்டத்திற்கு மட்டும் மாணவர்களை விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில் விடுதியில் தங்கி பயிலும் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் சேர்ந்து வாழும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவர்களும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற வேண்டுமானால் கட்டாயமாக ஆதார் எண் தேவை. இதுமட்டுமல்லாமல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – முழு விவரங்களுடன்!
மேலும், National Scholarship Portni (NSP)ல் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்த பின்பு தான் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, National Scholarship Portni (NSP)ல் பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் பின்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க Nodal Officerகளை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.