தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் இனத்தவர்கள், மாற்றுத்திறனாளி போன்ற பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்கள் அரசு வழிகாட்டுதலின் படி பள்ளிகள், கல்லூரிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிவிப்புகள் ஆண்டுதோறும் அரசால் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 1 – 12ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கும், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, செவிலியர் மாற்று ஆசிரியர் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கும் மத்திய அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை (அக்.07) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – தயாராக இருங்க மக்களே!

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தகுதியான பள்ளி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் அக்.15ம் தேதி வரையும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நவ. 15ம் தேதியும் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!