தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித்தொகை :
தமிழக அரசு மாணவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அது குறித்த விவரங்கள் மற்றும் உதவி தொகை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – டாஸ்மாக் விற்பனை பாதிப்பு!
தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள வேலூர் மாவட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று கொள்ளுமாறு கூறப்படுகிறது. பெறப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றுகளுடன் தகுதியான விண்ணப்பங்களை 30 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முகவரி:
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம்,
2வது தளம், சேப்பாக்கம்,
சென்னை – 5.
தொலைபேசி எண் 044-28551462