பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை – கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கரூர் மாவட்ட மாணவர்கள் 06.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உதவித்தொகை விண்ணப்பங்கள்:
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனிற்காக ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உதவிதொகையானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிபந்தனை இன்றி வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 10.11.2022 தேதி முதல் இணையதளம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் – புதுவை அரசின் திடீர் முடிவு!
Exams Daily Mobile App Download
அதன் பின் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022 தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மேலும் புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 ஆண்டு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023 தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.