ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் குறித்த விவரங்களும், பயன்களும் – தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு!!
இந்திய அரசாங்கத்தின் புதிய திட்டமான ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் தொழில்முனைவோருக்கு மலிவான வணிக நிதியை வழங்க தொடங்கப்பட்டதாகும். இது பற்றிய விவரங்கள் மற்றும் பயன்களை பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம்
இந்தியாவில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களில் இருந்து பெண் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவோருக்கு ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தொழில்முனைவோருக்கு மலிவான வணிக நிதியை வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் தொழில்முனைவோருக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மானியம் பெற்ற கடன் தொகை வழங்கப்படுகிறது.
சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம்.. மத்திய சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்!
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டத்தின் நோக்கமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்குவது, ஸ்டார்ட் அப் தொடங்குவதை எளிமையாக்குவது, வரி சலுகைகள் வழங்குவது ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 452-ல் இருந்த நிலையில், 2022 இல் 84,012 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்க ஸ்டார்ட் அப்களுக்கான நிதி (FFS) மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (SISFS) ஆகியவற்றை அரசாங்கம் செயல்படுத்தி இருக்கிறது,
ஸ்டார்ட் அப்களுக்கான நிதி (FFS) திட்டம்: இந்த திட்டத்தின் மூலம் ஸ்டார்ட் அப்களின் நிதி தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் டிபிஐஐடி கண்காணிப்பு நிறுவனம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDPI) என்பது FFS-ன் இயக்க முகமைகளை நிறுவி இருக்கிறது
ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (SISFS): இந்த திட்டத்தின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் மேம்பாடு, தயாரிப்பு, சந்தை நுழைவு மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
தொடக்கங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS): இந்த திட்டம் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு நிதியளிப்பதற்காக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மூலம் DPIIT -யால் அங்கீகரிக்கப்பட்ட கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.