தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதையடுத்து நடப்பு ஆண்டில் பள்ளி மாணவரக்ளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 14,17,19 வயது மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளையும் பல்வேறு நிலைகளில் நடைபெற உள்ளது. அத்துடன் மாணவ, மாணவியருக்கு தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் முதற்கட்டமாக 14,17,19 வயது உட்பட்டவர்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி நடத்தப்பட உள்ளது. அத்துடன் இவர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 2ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நவம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.