ஆதாரை கொண்டு நடக்கும் மோசடிகள் ..பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசு!
மத்திய அரசு ஆதார் அட்டையை பொதுஇடங்களில் பதிவிறக்கம் செய்யும் பொதுமக்களுக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதன் படி பொதுமக்கள் கவனமுடன் ஆதாரை கையாள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆதார் அட்டை:
ஆதார் அட்டை மைய அரசின் அறிவிக்கப்பட்ட முக்கிய ஆவணமாக உள்ளது. அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் ஆவணமாக கையாளப்படுகிறது. ஆதார் எண் மட்டும் இருந்தால் ஒருவரை பற்றிய அனைத்து விவரங்களும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் வகையில், மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஆதார் அட்டையை மற்றவர்கள் மோசடி செயல்களுக்கு பயனப்டுத்துவது அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, நகல் எடுக்கும் இடங்களிலும், ஆதார் பதிவிறக்கம் செய்யும் இடங்களிலும், நாம் வேறு தேவைகளுக்காக ஆதார் அட்டையின் நகலை கொடுக்கும் இடங்களில் நமது ஆதார் எண் திருடப்பட்டு வருவது நடந்து வருகிறது. இதனால் இனி பொது இடங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் போது மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை பயன்படுத்துமாறு மத்திய அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது.