தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பயனாளிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் 2000 ரூபாய் பணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழக கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிபந்தனைகளை வரையறை செய்யும் பணியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!
அதாவது அரசு ஊழியர்கள், ஓய்வுதியதாரர்கள், அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் 2021 மார்ச் 31 பிறகு நகைக்கடன் பெற்றவர்கள் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்தவர்கள் போன்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலின் போது பொதுவாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து விட்டு ஆட்சிக்கு வந்ததும் நிபந்தனைகள் விதிப்பது நியாயமற்றது என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளிடம் கூட்டுறவு சங்க செயலாளர் 4,000 ரூபாய் லட்சம் கேட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. லஞ்சம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மேலப்பட்டியைச் சேர்ந்தவர்கள், ஏழாயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று செயலாளர் கூறியுள்ளார்.