ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை – உச்ச நீதிமன்றம் அதிரடி!
ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பாதிப்படைந்த பயணிகளுக்கு ரயில்வே துறை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில்வே துறை பயணிகள் வருகை இன்றி பெரும் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டாலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டு ரயில்வே துறையின் வருவாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பாதிப்படைந்த பயணிகளுக்கு ரயில்வே துறை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கடந்த 2016-ம் ஆண்டு ஜம்மு நகரிலிருந்து ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள இருந்த ஒரு குடும்பத்தினர் ரயில்கள் தாமதம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பின் வாடகைக்கு கார் பிடித்து வீட்டிற்கு சென்றனர். மேலும் அவர்களின் பல்வேறு பயண திட்டங்களும் ரத்தானது. இதனால் அக்குடும்பத்தினர் ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம் மற்றும் சேவை குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
CA 2021 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ICAI முக்கிய அறிவிப்பு!
இந்த வழக்கு விசாரணையில் அக்குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.30,000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்த விதமான காரணமும், ஆதாரமும் இல்லாத நிலையில், தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ரயில் தாமதமாக வந்ததை நிரூபிக்காத நிலையில் ரயில்வே துறை பயணிக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.