செப்.15 இரண்டு மணி நேர வங்கி சேவைகள் பாதிப்பு – எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
நாளை பாரத ஸ்டேட் வங்கி நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இரண்டு மணி நேரத்திற்கு இணைய சேவைகள் இருக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
வங்கி சேவைகள்:
பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப்பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவு கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!
2021-2022ம் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் கடந்த நிதியண்டை விட அதிகமாக 54% நிகர லாபம் ரூ.6,504 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பராமரிப்பு பணிகளுக்காக SBI வங்கி டிஜிட்டல் சேவைகளை ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் சில மணிநேரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அதேபோல், தற்போது நடப்பு மாதத்திலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக வங்கி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
அக்.15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
வங்கியின் அறிக்கையில், செப்டம்பர் 15ம் தேதியான நாளை 2 மணி நேரங்களுக்கு மாநில இணையதளம் தனது வங்கி பயன்பாட்டில் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதால் வங்கியின் இணைய சேவைகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்குவதற்காக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.