SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்!
Investigating Officer (IO) பணியிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Investigating Officer (IO) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31.12.2019 அன்றைய நாளுக்கு பின் ஓய்வு பெற்றவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
- இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் OMCL சென்னை வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.