SBI வங்கி வேலைவாய்ப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – வெடித்த சர்ச்சை! எம்பி கடிதம்!
இந்தியாவில் ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவுகள் வெளிவரும் போதுதெல்லாம் அரசும், வங்கியும் இடஒதுக்கீடு நெறிமுறைகளை தொடர்ந்து மீறுகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் வங்கி முடிவுகள்:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பணியிடங்களுக்கு தேர்வுகள் வாயிலாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படுவதில் அரசு இட ஒதுக்கீடு விதிமுறைகளை மீறுவதாக கூறி கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சமூக நீதி அமைச்சகம் மற்றும் வங்கியின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச வேட்டி, சேலைகள் – புதிய சிக்கல்!
அந்த கடிதத்தில் பொதுப்பட்டியல் தயாரிக்கப்படும் போது அனைத்து பிரிவு போட்டியாளர்களையும் அதிக மதிப்பெண் வரிசையில் அப்பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். பின்னர் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வருடமும் ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் குறித்து சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது விதிமீறல் என்று தெரிவித்துள்ளார்.
தென் சென்னையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என ஒவ்வொரு முறையும் நான் எழுதிய கடிதங்களுக்கு அமைச்சகம், ஸ்டேட் வங்கி அளித்த பதில்கள் இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன. ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவுகள் வரும் போது பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் இட ஒதுக்கீடு நெறிமுறை மீறல்களை தொடர்கின்றது. எனவே பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.