SBI வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.29ம் தேதி கடைசி நாள்!
தற்போது SBI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் Circle Based Officer பணியிடத்தில் 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வங்கியில் வேலை:
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் Circle Based Officer பணியிடத்தில் 1226 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 276 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்த எழுத்துத் தேர்வு ஜனவரி 2022 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் வருகிற 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 12ம் தேதிக்கு பின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இப்பணியிடத்தில் சேருபவருக்கு மாத சம்பளமாக ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான வயது வரம்பு 01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ!
மேலும் விண்ணப்பங்களை SBI வங்கியின் www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கான தேர்வு மையங்கள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெறும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
SBI வங்கியில் அறிவித்துள்ள காலிப்பணியிடம் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.