தமிழகத்தில் வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – SBI வங்கியின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஹவுஸ் லோன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு இந்த பதிவு உங்களுக்கு தான். மேலும் இந்த பதிவில் எஸ் பி ஐ வங்கி ஹவுஸ் லோன் குறித்த ஒரு திட்டத்தை வைத்து உள்ளது. இது குறித்தும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
எஸ்பிஐ வங்கி:
இந்தியாவில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. மேலும் இதுவரை கடன் வாங்கி இருக்காவிட்டாலும், அல்லது உங்களிடம் கடன் பெற தேவையான தகுதிகள் இருந்தாலும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு கவலையும் இனிமேல் கிடையாது. இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஒரு அருமையான வாய்ப்பை வழங்கி வழங்க உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம் .
இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா நான்காம் அலை பரவல் – மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்?
நாட்டின் மிக முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி , குறைந்த தகுதிகளை கொண்ட மற்றும் இதுவரை கடன் பெறாத கடன் வாங்குபவர்களுக்கு சேவை செய்வதற்காக மேலும் நடுத்தர மக்களுக்கு இந்த திட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் மலிவு விலை வீடுகள் பற்றாக்குறை நாட்டிற்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகத்தின் முறைசாரா பிரிவுகளுக்கு, என SBI தெரிவித்துள்ளது.
அரங்கேறும் வேலன், வள்ளியின் திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
இந்த நிலையில் SBI அளித்து உள்ள விட்டு கடன்கள் CRE வீட்டுக் கடன்கள், டாப்-அப் கடன்கள், ரியல்டி கடன்கள், பழங்குடியினர் மற்றும் P-LAP போன்றவற்றின் கீழ் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து, ஏதேனும் ஒன்றின் கீழ் வீட்டுக் கடனைப் பெற விரும்பினால், இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து வட்டி விகிதங்கள் 6.65 சதவீதத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. அதனால் CIBIL ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதங்களைச் சரிபார்க்கும் முன் CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கவும் என்று SBI வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.