கொரோனா இரண்டாம் அலை – ஸ்டேட் பேங்க் ரூ.71 கோடி ஒதுக்கீடு!!
கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு உதவியாக SBI (State Bank of India) ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர மேலும் பல சலுகைகளையும் வழங்கியுள்ளது.
SBI நிதி ஒதுக்கீடு:
கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நாடுகளில் அதிகமான பாதிப்பு இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின் முதலாம் அலையை நேர்த்தியாக எதிர்கொண்ட இந்தியா, அதன் இரண்டாம் பரவலில் தத்தளித்து வருகிறது. இந்த நோய் தாக்கம் காரணமாக ஒரு நாளைக்கு நாடு முழுவதும் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர 3 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் மரணத்தை சந்தித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் இந்தியாவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது. அது தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் என பலர் நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு, SBI தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.39,100/
இதனடிப்படையில் SBI வங்கி ரூ.71 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன் படி இந்தியாவில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ள சில மாநிலங்களில், 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள், 250 படுக்கைகள் ICU வசதிகள் மற்றும் 1000 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் வசதிகள் ஆகியவற்றை அமைக்க இந்தியாவுக்கு ரூ.30 கோடியை SBI வங்கி கொடுத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்