SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை வெளியீடு!
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சைபர் அட்டாக் குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எஸ்பிஐ வங்கி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் வங்கிகள் மட்டும் மக்கள் தேவைக்காக இயக்கப்பட்டு வந்தது. வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியதால் ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் 50% ஊழியர்களுடன் இயங்கியது. கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவும் நேரத்தில் மக்கள் வங்கிக்கு நேரடியாக வராமல் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை!!
அனைத்து வங்கிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தின் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கூறியது. இந்த நிலையில் சில மோடி கும்பல்கள் போலி வலைத்தளங்களை உருவாக்கி மக்களிடம் பணம் கையாடல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த குற்ற சம்பவத்தை கண்டறிந்து சைபர் கிரைம் வங்கி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Pawan Hans Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
எஸ்பிஐ தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு சைபர் அட்டாக் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கையை விடுத்துள்ளது. போலியான கஸ்டமர் கேர் நம்பர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கஸ்டமர் கேர் நம்பரை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் தேடுங்கள். மேலும், வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிராதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து வீடியோ ஒன்றையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது