ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ – பெற்றோர்கள் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் பொன்மகள் சேமிப்பு திட்டம் போன்று பொன்மகன் திட்டம் அமலில் உள்ளது. இது குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொன்மகன் சேமிப்பு திட்டம்:
தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் பல இயங்கி வருகிறது. இதில் பொன்மகள் சேமிப்பு திட்டம் என்ற ஒன்று அனைவரும் அறிந்ததே. மத்திய அரசு அறிமுகப்படுத்திய பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தை போலவே ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் – DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!
மேலும் இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. அஞ்சல் துறையில் செயல்படும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம். 8.1% வழங்கப்படும் இந்த வட்டியானது ஆண்டுக்கு ஆண்டு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்!
குழந்தையின் கல்விக்கு இந்த தொகையானது பெரிதும் பயன்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.9 சதவீதம் ஆகும். அதேபோல் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெற முடியும். இந்த திட்டம் அதன் சேமிப்பு காலம் முடிந்ததும் ஒரு பெரும் தொகையை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.