வெளிநாட்டில் பணியாற்ற விருப்பமா? பிப்.28 & மார்ச் 1ல் நேர்காணல்! முழு விவரம் உள்ளே!

0
வெளிநாட்டில் பணியாற்ற விருப்பமா? பிப்.28 & மார்ச் 1ல் நேர்காணல்! முழு விவரம் உள்ளே!
வெளிநாட்டில் பணியாற்ற விருப்பமா? பிப்.28 & மார்ச் 1ல் நேர்காணல்! முழு விவரம் உள்ளே!
வெளிநாட்டில் பணியாற்ற விருப்பமா? பிப்.28 & மார்ச் 1ல் நேர்காணல்! முழு விவரம் உள்ளே!

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான நேர்காணல் சென்னையில் நடைபெறும் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு தகுதியான செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இப்பணியிடத்திற்க்கான நேர்காணல் சென்னையில் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வருகிற பிப்ரவரி 28ம் தேதி அன்றும், மார்ச் 1ம் தேதி அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றதுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தங்குமிடம் , உணவு , விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகர் அல்லது ஏஜெண்டுகள் தேவையில்லை என்றும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக இப்பணிக்கு பதிவு செய்து வேலைவாய்ப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!