சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு செல்ல 3 ஆண்டுகள் தடை – செளதி அரேபியா அரசு அறிவிப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செளதி அரேபியா நாட்டு மக்கள் செல்ல அந்நாட்டு அரசு 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
செளதி அரேபியா மக்களுக்கு தடை:
கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் பரவி வருகிறது. அனைத்து நாடுகளும் தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனாலும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா இரண்டாம் அலையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த தாக்குதலாக டெல்டா வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி நோயாளிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
தமிழக கிராமப் புறங்களில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!
மற்ற நாடுகளை தொடர்ந்து செளதி அரேபியா கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 1,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8,189 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் செளதி அரேபியா மக்களை தொற்றிலிருந்து காக்கும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாதிப்புகள் அதிகமுள்ள நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் செளதி அரேபியா அரசு சிவப்பு பட்டியலில் உள்ள ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு செல்ல 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.