தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமைகளில் விடுமுறை! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சனிக்கிழமைகளில் விடுமுறை! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சனிக்கிழமைகளில் விடுமுறை! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமைகளில் விடுமுறை! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவதற்கான தேதி மற்றும் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் முடிப்பதற்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடைபெற்றது. அதனால் மாணவர்களுக்கு இது கூடுதல் மனச்சுமையை ஏற்படுத்தியது. இதனை தவிர்க்க அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – மே 28 வரை ஊரடங்கு அமல்! அரசு அறிவிப்பு!

அதன்படி பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடைபெறுவதற்கான தேதி பற்றியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பை வெளியிட்டார். இவர் தனது அறிவிப்பில், தமிழகத்தில் வருகிற கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி அன்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி அன்றும் பொதுத்தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!