தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்த வந்த நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கும், நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சியில் முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 2022 ஜனவரி 3ம் தேதி முதல் சுழற்சி வகுப்புகள் பிறகு செய்யப்பட்டு தினசரி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புகார் அளிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
மேலும் நடப்பு கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக நடுநிலை வகுப்புகளுக்கு ஜனவரி 5ம் தேதி முதல் மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டும் ஒரு வாரம் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் சனிக்கிழமைகளில் 40% தான் வருகை புரிகின்றனர். தொடர்ச்சியாக வாரத்தின் 6 நாட்களும் பள்ளிக்கு வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பள்ளிகளுக்கு சனிக்கிழமை தோறும் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் முதல்வர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெவ்வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கருத்தில் கொண்டு டிசம்பர் 24ம் தேதியும் விடுமுறை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.