தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமை விடுமுறை!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மேலும் செய்முறை தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கவுள்ளது. தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு பாடங்கள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். வெகு நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தால் மாணவர்கள் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யவும், பாடங்களை விரைந்து முடிக்க சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெளியில் தாக்கம் அதிகரித்து காணப்படும். தற்போது கோடை காலம் நிலவுவதால் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் தினமும் பள்ளி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளனர்.