தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
LIC அசத்தல் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.29 சேமித்தால் ரூ.3.97 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 310 கிமீ தொலைவில் கிழக்கு திசை நோக்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு – நவ.24ம் தேதிக்கு மாற்றம்!
மேலும் பொதுமக்களது இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.