அரசு அலுவலகங்கள் & பள்ளிகளுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை? அரசுக்கு கோரிக்கை!
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் மின்சார பற்றாக்குறையான சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சனிக்கிழமைகளை விடுமுறையாக மாற்றியதன் மூலம் மத்திய அரசு இரண்டு நாள் வார இறுதிக்கு திரும்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல்கள் அளித்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடம் முன்மொழிவு அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மின்சாரப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஆற்றலைச் சேமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட இந்த முன்மொழிவு இப்போது அரசின் கவனம் பெற்றுள்ளது. தவிர, சந்தைகளின் இயக்க நேரத்தை மாற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மின்சாரத்துறை பிரிவு அரசுக்கு முன்மொழிந்தது. முன்னதாக பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப், பாகிஸ்தான் அரசாங்கம் 4.5 நாள் வேலை வாரத்தை கடைபிடிக்கவும், வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் அரை நாள் மற்றும் சனி மற்றும் ஞாயிறு தோறும் விடுமுறை தினங்களாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
TN TRB தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறையின் புதிய உத்தரவு!
இதற்கிடையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற முன்மொழிவு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் இந்த முன்மொழிவை அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிராகரித்தார். இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்தவுடன் பிரதமர் ஷெஹ்பாஸ் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இரண்டு வார விடுமுறைகளை (சனி, ஞாயிறு) முடித்துக் கொள்ள உத்தரவிட்டார். அந்த வகையில் இப்போது வரை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.