தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை விடுமுறை ரத்து!
தமிழக ரேஷன் கடைகளுக்கு நாளை அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் முறையில் தினசரி பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பை விநியோகம் செய்ய ரேஷன் கடைகள் முழு நேரமாக விடுமுறை இன்றி தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மேலும் கடந்த மாதம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்குள் பரிசு பொருட்கள் வழங்கபட்டதால் மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் கடந்த மாதம் விடுமுறை தினங்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட்டு பயனாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் ரேஷன் கடைகள் செயல்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 26ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!
இந்த நிலையில் நடப்பு மாதம் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவாகாததால் பலர் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை. அதனால் அனைவரும் பொருட்களை பெறுவதற்கு ஏதுவாக நாளை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை (பிப்.26) வழக்கம் போல ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் 19ம் தேதி விடுமுறை ரேஷன் கடைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.