தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை கூட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் வெகுவிரைவாக நடத்தப்பட்டு வருகிறது. பாடத் திட்டங்கள் ஏதும் முடிக்காத காரணத்தினாலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதாலும் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட சிறப்பு அவசர செயற்குழுக் கூட்டம் எஸ்.சந்திரசேகர் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
பாக்கியா மீது கோவமாக இருக்கும் ராதிகா, அம்மாவை காப்பாத்த கஷ்டப்படும் எழில் – இன்றைய எபிசோட்!
அந்த கூட்டத்தின் போது ஆசிரியர்கள் சனிக்கிழமையும் பணி நாளாக இருப்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது. இதனால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஆங்கில வழி கல்வி இல்லாத உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடர வேண்டும் எனவும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், வீட்டு வாடகைப் படியை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.