தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசு பரிசீலனை!

0
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை - அரசு பரிசீலனை!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை - அரசு பரிசீலனை!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசு பரிசீலனை!
தமிழகத்தில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் இனி சனிக்கிழமைகளில் விடுமுறை என தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கடந்த இரண்டு வருடமாக கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வந்தனர். கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. தாமதமாக பள்ளிகளை திறந்ததால் முழு ஆண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை முடிப்பதற்காக ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆன நிலையில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அதன்படி,கொரோனா விடுமுறையை சரி செய்யும் வகையில் இந்த வருடம் மாணவர்களுக்கு சனிக்கிழமை கூட விடுமுறை விடாமல் பள்ளிகளுக்கு வர வைத்தனர். இதனால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது. எல்லா வருடமும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்காக ஏப்ரல் 20ம் தேதியில் விடுமுறை விடப் பட்டிருக்கும் அதை தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் 18ம் தேதி ஆகியும் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று வீடுகளுக்கு வருவதற்குள் சோர்ந்து விடுகிறார்கள். இதில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்வருடன் அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!