தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20க்கு முன்னர் பள்ளிகள் திறக்க வேண்டும் எனவும், சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை:
ஆசிரியர் சங்கம் மாநில தலைவரான பி.கே இளமாறன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த காலங்களில் இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் நலன் கருதி 100% பாடத்திட்டங்களில் இருந்து 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும் குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்களுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் சனிக்கிழமையில் கூட பள்ளி இயங்கும் காரணத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை மாணவர்கள் படித்தால்தான் போட்டித் தேர்வுகளை எளிதில் சமாளிக்க முடியும். ஏற்கனவே ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தியதால் மாணவர்களுக்கு கற்றல் திறன் சற்று குறைவாக இருந்திருக்கிறது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தான் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு பழைய நிலைமைக்கு மாணவர்களை கொண்டு வந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், நேரடி வகுப்புகள் தள்ளிப்போவது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என ஆசிரியர்கள் அறிவித்திருந்தது. இதனால் மாணவர்கள் படிக்கும் பாடங்களை குறைக்காமல் அனைத்து பாடங்களை நடத்துவதற்கு வசதியாக ஜூன் 20க்கு முன்னர் பள்ளிகளை திறக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர்.