காமன்வெல்த் போட்டியில் அடுத்த பதக்கத்தை உறுதி செய்த சத்யன் ஞானசேகரன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா அடுத்தடுத்து பதக்கத்தை அள்ளி குவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ் வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டி
22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022 இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்கள் இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள கொண்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே இந்தியா ஏகப்பட்ட விருதுகளை வென்று குவித்து கொண்டிருக்கிறது.
திருப்பதியில் இன்று முதல் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் – ஆன்மிக சுற்றுலா திட்டம்!
நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் தங்க பதக்கம் வென்றார். அதே போல மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை நீத்து தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும், மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பெற்று பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். அடுத்தடுத்து இந்தியா தங்க பதக்கங்களை வென்று குவித்து கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதே போல, 11 ஆம் நாளான காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா பல பதக்கங்களை குவித்து கொண்டிருக்கிறது. அதாவது, டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்கிற கணக்கில் தோற்கடித்து தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தமாக 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.